சித்திரக்கவி

மனதுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்துவன இலக்கியங்கள். எனவே மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அனைத்துக் கலைவடிவங்களையும் இலக்கியங்கள் என்று கூறலாம். சொல்லை கவிதையாக்கினால் மகிழ்ச்சி. அக்கவிதையைப் பாடலாக்கினால் மகிழ்ச்சி. அப்பாடலை நடனமாக்கினால் மகிழ்ச்சி. அப்பாடலை நடித்தால் மகிழ்ச்சி இவ்வாறு சொற்கள் பல வடிவங்களை எடுத்துக் கொள்ளுகின்றன. இவ்வாறு சொல்லே எழுத்தோவியமானால் அதுவே சித்திரக்கவி. ஓவியம் மனதுக்குள் ஒரு கதை சொல்லும். காட்சிப்படிவத்தை ஏற்படுத்தும். உலகப் புகழ் பெற்ற ஓவியர் லியானாடோர் டாவின்சியின் ஓவியம் பற்றி அறிந்திருப்பீர்கள். அவை பல மர்மங்களை எதிர்காலத் தலைமுறைக்கு சொல்லிச் சென்றதை அறிந்திருப்பீர்கள். இவருடைய லாஸ்ற் சப்பர் (டுயளவ ளரிpநச) என்னும் ஓவியம் பல மர்மங்களை மறைந்திருந்தது. அதில் ஒன்று அப்படத்தில் காணப்பட்ட ரொட்டித் துண்டுகளை இணைத்துப் பார்த்த போது அது இசைக் குறிப்புக்களைக் காட்டியது. அக்குறிப்புக்களை இசைத்துப் பார்த்த போது பிரபஞ்சத்தின் ஓசை எழுந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு ஓவியத்திற்குள் கருத்துக்கள் அடங்கிக் காணப்படும். இலக்கியத்தில் இவர்கள் என்னும் இப்பகுதியில் இவை பற்றி நோக்குவோம.;

முதலில் தமிழில் காணப்படும் இலக்கிய வகையிலே ஒன்றான சித்திரக்கவியை எடுத்துநொக்கினால், திருமங்கையாழ்வார், அருணகிரிநாதர், இராமச்சந்திர கவிராயர், பரிதிமாற்கலைஞர் போன்றோர் சித்திரக்கவி பாடுவதில் வல்லவர்களாகக் காணப்பட்டார்கள். அட்டநாக பந்தனம், எழுத்துவர்த்தனம், மாலை மாற்று என்னும் வகைகள் இதில் இருக்கின்றன.

அட்டநாக பந்தனம் என்பது எட்டு நாகபாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருப்பது போன்று படம் வரைந்து கவிதை ஒன்றை எழுதி அக்கவிதை அந்தப் பிணைப்புக்குள்ளே நுழைந்து அந்தக்கவிதை பொருந்திவருமாறு ஓவியமும் கவிதையும் அமைந்திருப்பதே அட்டநாகபந்தம் என்னும் சித்திரக்கவி. இது பாம்பின் தலையில் தொடங்கி பாம்பின் வாலில் முடிக்க வேண்டும். உதாரணமாக இச்சித்திரத்திலே

பாரதிக் கெல்லை
பாருக்குள்ளே இல்லை என்னும் சித்திரக்கவி பாடப்பட்டுள்ளது

எழுத்து வர்த்தனம் என்பது பாடலுக்குள்ளே எழுத்து வளரும். உதாரணமாக

மாத்திரை ஓரெழுத்துச் சொல்லும், மற்றொன்று
நிரப்பிட நீரிற்பூ ஒன்றாம் – நிரப்பிய
வேறோர் எழுத்துய்க்க வீரராசேந்திரன் நாட்டு
ஆறாம் – காவிரி

மாத்திரை ஓரெழுத்துச் சொல்லும் – கா
மற்றொன்று நிரப்பிட நீரிற்பூ ஒன்றாம் – காவி
வேறோர் எழுத்துய்க்க வீரராசேந்திரன் நாட்டு
ஆறாம் – காவிரி

மாலை மாற்று என்பது

பின்புறம் படிக்கும் போது முன்புறம் படிப்பது போன்ற பொருள் தரும்.

தேருவருதே மோரு வருமோ
மோருவருமோ தேரு வருதே

அதாவது தேர் வரும் போது நீர் மோர் வருமோ? மோர் வருகிறது. ஓ தேரும் வருகிறது.

இவ்வாறு சித்திரக்கவி கடினமாக இருந்தாலும் கவிஞர்கள் மனதுக்குள் மகிழ்ச்சியைக் கொண்டுவருகின்றது. இவ்விலக்கிய வகையில் எமக்குள்ளும் பலர் ஓவியக்கலையின் மூலம் இலக்கியம் சொல்பவர்களாக மகிழ்ச்சியை ஏற்படுத்துபவர்களாக இருக்கின்றார்கள். எடுத்துக்காட்டாக வெற்றிமணி பத்திரிகையின் ஆசிரியர் மு.க.சிவகுமாரன் அவர்கள் ஓவியக்கலைஞர் சிற்பக் கலைஞர் என்று அறிந்திருக்கின்றோம். ஓவியம் எவ்வாறு இலக்கியம் சொல்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இப்படத்தை எடுத்துநோக்குவோம்.

இந்தப் படத்தைப் பார்த்தீர்களானால், அங்கு அழகான பின்னணி வர்ணத்தோடு இரண்டு உதடுகள் இருக்கின்றன. ஒரு உதடு வரைய 3 கோடுகள் வேண்டும். இரண்டு உதடுகள் இருக்கின்றன. மேலே உள்ளது ஆணுடையது. கீழேயுள்ளது பெண்ணுடையது. பெண்ணுடைய உதட்டில் மேல் வரியை எடுத்து ஆணுடைய உதட்டிற்கு மேலே மீசையாகப் போட்டிருக்கின்றார். அதாவது ஆணினுடைய கௌரவம் பெருமை என்பன அவனோடு வாழும் பெண்ணைக் குறித்தே இருக்கின்றன. பெண்ணே அவனுடைய தகுதியை உயர்வுக்குக் கொண்டு வந்து வைத்திருக்;கின்றாள். அரசனுக்கு மந்திரிபோல் மிகுந்த நுட்பமான அறிவுடன் தொழிற்பட்டு குடும்பத்தின் பெருமைக்கு காரணமாகின்றாள். அதனை எடுத்துக்காட்டுவதற்காக அந்த கௌரவமான மீசையை பெண்ணின் மேல் உதட்டில் இருந்து எடுத்திருக்கின்றார். அதேபோன்று ஆணினுடைய உதட்டு நடு வரியை எடுத்து பெண்ணினுடைய உதட்டிலே போட்டிருக்கின்றார். அதாவது நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்பது போல. அதாவது பெண்ணுக்குரிய பேச்சின் சுதந்திரத்தை ஆண் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் போதுதான் அவனுக்கு அந்த மீசையே உருவாகும் இவ்வாறான உயர்ந்த தத்துவத்தை எழுத்தில் மட்டுமல்ல ஓவியத்திலும் கொண்டு வரலாம் என்பதை இக்கலைஞன் எடுத்துக்காடடியுள்ளார்.

ஓவியம் கதை கூறும் கலையை இலக்கியமாக்கும் வல்லவர்கள் இலக்கிய காலத்தில் மட்டுமல்ல. இயந்திர உலகத்திலும் வாழுகின்றார்கள் என்பது உண்மையே.

-கௌசி

2,170 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *