யாழ் நகரில் கே. டானியலின் ‘சாநிழல்’ புத்தக வெளியீட்டு விழா.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 14ஃ05ஃ2023 யாழ்ப்பாணத்தில் உள்ள ரிம்மர் மண்டபத்தில் கே.டானியல் அவர்களின் “சாநிழல்” புத்தக வெளியீடு இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு குறித்த நேரத்தில் மக்கள் திரண்டு வந்து ஆதரவு தந்தது டானியல் எழுத்து மீது மக்கள் கொண்ட அன்பை வெளிப்படுத்தியது. அவரது எழுத்துகள் உயிர்வாழ்கின்றது. விழாவிற்கு பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் தலைமைதாங்கி நடத்தினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த பிரமுகர்கள், திரு. டானியல் வசந்தன், பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, பேராசிரியர் மாக்ஸ், திரு. அசுரநாதன், முனைவர் ச.மனோன்மணி. திருமதி. எஸ்தர், திரு. ராகவன், செல்வி அஜனா வசந்தன். திரு ஆஷிக்கஹீனா. ஆகியோர். படங்கள். வெற்றிமணி. யேர்மனி.
956 total views, 2 views today